திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் வி.கே.புரம் கட்டபுளி, வடக்கு தெருவை சேர்ந்த ஆனந்த செல்வன் (30). அதே பகுதியைச் சேர்ந்த ஒரு சிறுமியிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார். இது குறித்து சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் அம்பாசமுத்திரம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர், வனிதா வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு ஆனந்த செல்வனை போக்சோ சட்டத்தின் கீழ் (30.04.2025) அன்று கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்