திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் பரப்பாடி அருகேயு உள்ள ஏமன்குளத்தைச் சேர்ந்தவர் திருமுருகன்(32). இவர், அதே பகுதியைச் சேர்ந்த ஒரு சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி பாலியல் தொந்தரவு செய்துள்ளார். இது குறித்து சிறுமியின் பெற்றோர் வள்ளியூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில், ஆய்வாளர், கௌரி மனோகரி, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து திருமுருகனை கைது செய்தார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்