தென்காசி : தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட திருவேங்கடம் சின்ன காளான்பட்டி கிழக்கு தெருவை சேர்ந்த பூவைலிங்கம் (23). ஆழ்வார் குறிச்சி காவல் நிலைய சரகத்தில் கைது செய்யப்பட்ட கஞ்சா, ஆயுத தடைச் சட்டம் போன்ற பல்வேறு முன் வழக்குகளை கொண்ட கீழஆம்பூர் துர்க்கை அம்மன் கோவில் தெருவை சேர்ந்த கருத்தபாண்டி @ கார்த்திக் (24). மற்றும் செங்கோட்டை காவல் நிலையத்தில் தொடர் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட செங்கோட்டை முஸ்தபா கமால் (33) ஆகியோர் மீது குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. அரவிந்த் பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியர் ஏ.கே.கமல் கிஷோர் இ.ஆ.ப., உத்தரவின் பேரில் குற்றவாளிகள் மூவரும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்