திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2022 ம் ஆண்டு மனவளர்ச்சி குன்றிய சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த வழக்கில் போடியகவுண்டன்பட்டி பகுதியைச் சேர்ந்த அபிமன்யு(25). என்பவரை நிலக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் இவ்வழக்கு திண்டுக்கல் விரைவு மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர்.பிரதீப், இ.கா.ப அவரது அறிவுறுத்தலின்படி நிலக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர்.சத்திய பிரபா, நீதிமன்ற முதல் நிலை காவலர்.அனிதா மேரி மற்றும் அரசு வழக்கறிஞர்.ஜோதியின் சீரிய முயற்சியால் திண்டுக்கல் விரைவு மகிளா நீதிமன்ற நீதிபதி குற்றவாளி அபிமன்யு என்பவருக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ. 10,000/- அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார். மேலும் இந்தாண்டு இதுவரை 15 போக்சோ வழக்குகளுக்கு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா