திருநெல்வேலி : திருநெல்வேலி முன்னீர்பள்ளம் அருகே பிரான்சேரி, கீழத் தெருவை சேர்ந்தவர் சீதாராமன் (31). இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த ஒரு சிறுமியை கடத்தி பாலியல் வன்புணர்வு செய்த வழக்கில் முன்னீர்பள்ளம் காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இவ்வழக்கு விசாரணை திருநெல்வேலி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் நீதிமன்றம் சீதாராமனுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூபாய் 5000/- அபராதம் விதித்து தீர்ப்பளித்தது.
இவ்வழக்கில் திறம்பட புலன் விசாரணை செய்து, சாட்சிகளை விரைவாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி குற்றவாளிக்கு தண்டனை பெற்றுக் கொடுத்த சேரன்மகாதேவி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சத்யராஜ், காவல் ஆய்வாளர், சீதாலட்சுமி மற்றும் முன்னீர்பள்ளம் காவல்துறையினரை , திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N. சிலம்பரசன், இ.கா.ப., வெகுவாக பாராட்டினார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்