திருநெல்வேலி : திருநெல்வேலி நொச்சிகுளம், முருகன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஸ்டீபன், (21). இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த ஒரு சிறுமியிடம் தவறாக நடந்துள்ளார். இது குறித்து சிறுமியின் பெற்றோர் திருநெல்வேலி ஊரக அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில், காவல்துறையினர் ஸ்டீபன் மீது வழக்கு பதிவு செய்து போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
இவ்வழக்கு மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் வழக்கை விசாரித்த நீதிமன்றம் குற்றவாளியான ஸ்டீபனுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூபாய் 6 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தது. இவ்வழக்கில் திறம்பட புலன் விசாரணை செய்து சாட்சிகளை விரைவாக நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி குற்றவாளிக்கு தண்டனை பெற்றுக் கொடுத்த திருநெல்வேலி ஊரக அனைத்து மகளிர் காவல் நிலைய காவல்துறையினரை திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், N.சிலம்பரசன்.இ.கா.ப., வெகுவாக பாராட்டினார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்