திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், விஜயபதி, தெற்கு தெருவை சேர்ந்த வீரன் (75). என்பவர், கடந்த 2019 ஆம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த சிறுமியிடம் தவறாக நடந்துள்ளார். இது குறித்து சிறுமியின் பெற்றோர் வள்ளியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில், காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வீரனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இவ்வழக்கு மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் வழக்கை விசாரித்து வந்த போக்சோ நீதிமன்றம் குற்றவாளியான வீரனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூபாய் 6 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தது.
இவ்வழக்கில் திறம்பட புலன் விசாரணை செய்து சாட்சிகளை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி குற்றவாளிக்கு தண்டனை பெற்றுக் கொடுத்த வள்ளியூர் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல்துறையினரை திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், N.சிலம்பரசன்.இ.கா.ப, வெகுவாக பாராட்டினார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்