திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி, கரிசல்பட்டி, வடக்குத் தெருவை சேர்ந்தவர் அல்கீஸ் அமல்ராஜ் (50). இவர் கடந்த 2018-ஆம் ஆண்டு பள்ளி மாணவியை பாலியல் ரீதியாக துன்புறுத்தி மிரட்டல் விடுத்த வழக்கில் வீரவநல்லூர் காவல் துறையினரால் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். திருநெல்வேலி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம் அல்கீஸ் அமல்ராஜிற்கு ஓர் ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.20,000 அபராதம் விதித்து 16.06.2025 அன்று தீர்ப்பளித்தது. இவ்வழக்கில் குற்றவாளிக்கு தண்டனை பெற்றுக் கொடுத்த சேரன்மகாதேவி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சத்யராஜ் , காவல் ஆய்வாளர், மங்கையர்கரசி உள்ளிட்ட காவல்துறையினரை திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் N. சிலம்பரசன், இ.கா.ப., பாராட்டினார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்