திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் முத்தாரம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ரத்தினம் (45). தொழிலாளியான இவர், கடந்த 2022 ஆம் ஆண்டில் அதே பகுதியைச் சேர்ந்த 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால் அம்பாசமுத்திரம் காவல்துறையினர் ரத்தினம் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து கைது செய்தனர். இந்த வழக்கு திருநெல்வேலி போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் நீதிமன்றம் ரத்தினத்துக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து (02.07.2025) அன்று தீர்ப்பளித்தது.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்