திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2023-ம் ஆண்டு சிறுமியை காதலித்து அழைத்துச் சென்று திருமணம் செய்து பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கன்னிவாடி மாங்கரை பகுதியைச் சேர்ந்த பிரகாஷ்(26). என்பவரை கன்னிவாடி காவல் நிலைய போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் இவ்வழக்கு திண்டுக்கல் விரைவு மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் அ.பிரதீப், இ.கா.ப அவர்களின் அறிவுறுத்தலின்படி கன்னிவாடி காவல் நிலைய ஆய்வாளர் திரு.சிவக்குமார் அவர்கள், நீதிமன்ற முதல் நிலை காவலர் திருமதி.மாரியம்மாள் அவர்கள் மற்றும் அரசு வழக்கறிஞர் திருமதி.ஜோதி அவர்களின் சீரிய முயற்சியால் (01.08.2025) இன்று திண்டுக்கல் விரைவு மகிளா நீதிமன்ற நீதிபதி அவர்கள் குற்றவாளி பிரகாஷ் என்பவருக்கு 26 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ. 10,000/- அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்கள். மேலும் இந்தாண்டு இதுவரை 38 போக்சோ வழக்குகளுக்கு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா