தூத்துக்குடி: கடந்த (07.11.2025) அன்று மாலை தூத்துக்குடி இரண்டாம் இரயில்வே கேட்டில் இரயில் இன்ஜின் வருவதற்காக கேட் போடப்பட்டிருந்தது. அப்போது இரயில் தண்டவாளத்தில் பசு மற்றும் அதன் கன்று குட்டி ஒன்று திடீரென வந்து கேட்டிற்குள் நின்று கொண்டது. இதனையடுத்து அங்கு போக்குவரத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மத்திய போக்குவரத்து பிரிவு தலைமை காவலர் திரு. சுப்பையா அவர்கள் துரிதமாக செயல்பட்டு அந்தப் பசு மற்றும் கன்றினை கேட்டிற்குள் ஓரமாகப் பிடித்து வைத்து இரயில் இன்ஜின் செல்லும் வரை நிறுத்தி வைத்து பாதுகாத்தார். இதை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினர்.
மேற்படி பசு மற்றும் கன்றின் உயிரை காத்த தலைமை காவலரின் மனிதாபிமான செயலை பாராட்டி தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான் இ.கா.ப அவர்கள் (10.11.2025) தலைமை காவலருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
















