திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அரசு மருத்துவமனை புற நோயாளிகள் பிரிவில் வழக்கறிஞர் சுதாகர் என்பவர் சிகிச்சைக்காக வந்துள்ளார். புறநோயாளிகள் சிகிச்சை பிரிவில் நேரம் முடிந்த நிலையில் வழக்கறிஞர் எனக் கூறி சிகிச்சை பார்க்க வேண்டும் என கூறியுள்ளார். அப்போது பணியில் இருந்த மருத்துவர் ராஜிகணேஷ் அவருக்கு மாத்திரைகளை பரிந்துரைத்துள்ளார். தமக்கு அதிகமாக முதுகு வலிப்பதாகவும் ஊசி போடுமாறு கேட்டபோது புற நோயாளிகள் சிகிச்சை பிரிவின் நேரம் முடிந்து விட்டதாகவும் அவசர சிகிச்சை பிரிவில் சென்று சிகிச்சை பார்க்குமாறு மருத்துவர் கூறியுள்ளார். அப்போது மருத்துவரிடம் வழக்கறிஞர் சுதாகர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தகாத வார்த்தைகளில் பேசியதாக தெரிகிறது. இருதரப்புக்கும் வாக்குவாதம் முற்றிய நிலையில் வழக்கறிஞரை மருத்துவர் தாக்கியதாக கூறப்படுகிறது.
இது குறித்து தகவல் அறிந்த சக வழக்கறிஞர்கள் மருத்துவரை கைது செய்ய வேண்டும் எனக் கூறி மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மருத்துவரை கைது செய்தே தீர வேண்டும் எனக் கூறி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மருத்துவர் ராஜி கணேஷை பொன்னேரி காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். வழக்கறிஞர் ஒருவரை மருத்துவர் தாக்கியதாக கூறி வழக்கறிஞர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு