திருவள்ளூர்: பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் நடத்தி வரும் இனப்படுகொலையை கண்டித்து பொன்னேரியில் இஸ்லாமியர்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வெள்ளிக்கிழமை தொழுகையை முடித்த இல்லாமியர்கள் பொன்னேரி பழைய பேருந்து நிலையத்தில் ஒன்று கூடி இஸ்ரேலை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். பாலஸ்தீனத்தில் கொத்து கொத்தாக மடிந்து வெள்ளை துணி போர்த்தி மூடி வரிசையாக வைக்கப்பட்டுள்ள சடலங்கள் போன்ற பொம்மைகளை வைத்து நீதி கொட்டு போராட்டம் நடத்தினர். ஐ நா சபை தமக்கு உள்ள அதிகாரத்தை பயன்படுத்தி உடனடியாக போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தினர். மேலும் ஒன்றிய அரசு வாய் மூடி மௌனமாக இல்லாமல் அட்டூழியத்தில் ஈடுபட்டு வரும் இஸ்ரேலுக்கு துணை போவதை நிறுத்து பாலஸ்தீனத்தின் மீதான போரை முடிவுக்கு கொண்டு வருவதில் பங்கேற்ற வேண்டும் எனவும் ஆர்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு