திருநெல்வேலி : தமிழக காவல்துறை தலைமை இயக்குனர், உத்தரவுப்படி வாரந்தோறும் நடக்கும் குறை தீர்க்கும் முகாம் (16.04.2025) அன்று திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் பொதுமக்களிடம் இருந்து திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், N.சிலம்பரசன்.இ.கா.ப., 17 மனுக்களை பெற்று அவற்றின் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்து மனு மீதான விசாரணையை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்