திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பழனியில் தமிழ்நாட்டிலேயே அதிக அளவு பக்தர்கள் வரும் இடத்திலேயே முதல் இடம் பெற்ற ஸ்தலம் ஆகும் இங்கு குற்ற சம்பவங்கள் நடப்பது வழக்கமாகவே கொண்டுள்ளது கடந்த ஒரு வருட காலமாக பழனி டிஎஸ்பி தனஜெயன் பொறுப்பேற்ற பிறகு பழனியில் கஞ்சா ரவுடிசம் கட்டப்பஞ்சாயத்து வழிப்பறி உள்ளிட்டவை 80 சதவீதம் முற்றிலுமாக குறைந்துள்ளது
ஸ்மார்ட் சிட்டி போன்று பழனி உருவாக்குவதற்கு பல்வேறு தரப்பில் முயற்சிகள் மேற்கொண்டு திண்டுக்கல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திரு சச்சிதானந்தன் மூலம் நிதி ஒதுக்கீடு பெற்று பழனியில் முன்னுருக்கும் மேற்பட்ட கேமராக்கள் பொருத்தப்பட்டு குற்ற சம்பவங்களை முற்றிலுமாக குவித்துள்ளார் இவரது நடவடிக்கையை பார்த்த பழனியை சேர்ந்த சில சமூக ஆர்வலர்கள் தானாக முன்வந்து இதில் தமது பங்கும் இருக்க வேண்டும் என்று காவல் நிலையங்களுக்கு நன்கொடை வழங்கி உள்ளனர். கண்காணிப்பு கேமரா பொருத்தி குற்றவாளிகள் மற்றும் குற்றத்தில் ஈடுபடுவதை தொடர்ந்து காவல்துறையினர் கண்காணித்து வருகின்றனர் இதனால் பழனியில் போதை பொருள் விற்பனை ஆன கஞ்சா 90% குறைந்துள்ளது. ரவுடிசம் முற்றிலும் ஆக குறைந்துள்ளது.
அனைத்து காவல் நிலையங்களும் மூலிகைச் செடிகள் பழங்கள் பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்த பசுமை காவல் நிலையமாக மாற்றப்பட்டுள்ளது.
காவல் நிலையங்களில் ரவுடிகளின் நடவடிக்கையை கண்காணிக்கும் விதமாக வாரத்தில் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளும் குற்றவாளிகளை அழைத்து காவல்துறை சார்பில் சட்டங்கள் மற்றும் தண்டனை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல் இவை அனைத்தும் பழனி டிஎஸ்பி திரு தனஞ்செயன் அவர்கள் பொறுப்பேற்ற பின்பு பல்வேறு மாற்றங்களை உருவாக்கி உள்ளார்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா