திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் திருப்பாலைவனம் காவல் ஆய்வாளராக காளிராஜ் பணி செய்து வருகிறார். இவர் பணியில் இணைந்து 25 ஆண்டு காலங்கள் ஆனதை முன்னிட்டு பழவேற்காட்டில் உள்ள பொதுமக்கள் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. பழவேற்காடு ஸ்ரீ காளிகாம்பாள் ஆலய தியான மண்டபத்தில் நடைபெற்ற இந்த பாராட்டு விழாவை பழவேற்காடு தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள் ஏற்பாடு செய்தனர். காளிகாம்பாள் ஆலய பரம்பரை அறங்காவலர் பி.எஸ் பழனியப்பன் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியின் வரவேற்பை கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் ஹாஜா மொய்தீன் செய்தார்.
பழவேற்காடு வனத்துறை வனவர் நரசிம்மன், கூட்டமைப்பு நிர்வாகிகள் துரை.மகேந்திரன், துரை.முத்து, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்கள் எம்.எஸ்.காலேஷா,செல்வழகி எர்ணாவூரான்,முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் சம்பத், ஞானவேல், துணைத்தலைவர் பி.எல்.சி ரவி,வார்டு உறுப்பினர்கள் துராபுதீன், அப்துல் சம்மத், முன்னாள் பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் மோகனஜோதி, கோட்டைக்குப்பம் ஊராட்சி மகளிர் அணி பிரதிநிதி திலகவதனா, இயற்கை அறன் சமூக நல அறக்கட்டளை ஏகாட்சரம் உள்ளிட்ட பழவேற்காடு பகுதி முக்கிய பிரமுகர்கள் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டு காவல் ஆய்வாளர் காளிராஜை பாராட்டி வாழ்த்தினர். காளிகாம்பாள் ஆலயத்தில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று பின்னர் மாலை மரியாதை செலுத்தப்பட்டு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு