திருநெல்வேலி: தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் உத்தரவுப்படி ஒவ்வொரு புதன் கிழமையும் பொதுமக்கள் குறை தீர்க்கும் கூட்டம் திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. (12.03.2025) அன்று நடைபெற்ற இம்முகாமில் பொதுமக்கள் 05 பேர் கலந்து கொண்டு திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர், சந்தோஷ் ஹாதிமணி இ.கா.ப.,விடம் புகார் மனுக்களை அளித்தார்கள். புகார் மனுக்கள் மீது சரியான நடவடிக்கை மேற்கொண்டு உரிய தீர்வு கிடைக்க வழிவகை செய்யப்படும் என காவல் ஆணையர் கூறினார். இம்முகாமில் காவல் துணை ஆணையர்கள், V.கீதா, (மேற்கு) V.வினோத் சாந்தாராம்,(கிழக்கு) S.விஜயகுமார்,(தலைமையிடம்) ஆகியோர் கலந்துகொண்டனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்