கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக நாகர்கோவில் தக்கலை பகுதிகளில் பைக் திருட்டு புகார்கள் தொடர்ந்து வந்த வண்ணம் இருந்தது . இப்புகார்கள் சம்பந்தமாக உடனடியாக குற்றவாளிகளை கண்டறிந்து கைது செய்ய கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் R ஸ்டாலின் IPS அவர்கள் உத்தரவிட்டிருந்தார்கள். உத்தரவின் படி மார்த்தாண்டம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு நல்ல சிவம் அவர்களின் மேற்பார்வையில் ஆய்வாளர் திருமதி. அந்தோணியம்மாள், உதவி ஆய்வாளர் திரு மகேந்த் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை விசாரணையில் இந்தத் தொடர் பைக் திருட்டில் ஈடுபட்டது காட்டாக்கடை பகுதியை சேர்ந்த ஜஸ்டஸ் என்பவரின் மகன் பிஜோய்(20). மற்றும் மூன்று (18). வயதிற்கு உட்பட்ட இளஞ்சிரார்கள் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து ஆறு இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
















