திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரப் பகுதிகளில் இருசக்கர வாகன திருட்டு சம்பவங்கள் அதிகரித்தது தொடர்பாக பாளையங்கோட்டை காவல்துறையினர் வழக்குப் பதிந்து, வழக்கில் சம்பந்தப்பட்டவர்களைத் தேடி வந்தனர். தீவிர விசாரணையில், மாநகரப் பகுதியில் திருட்டில் ஈடுபட்டது தென்காசி மாவட்டம், ஆலங்குளத்தைச் சேர்ந்த பிரபாகர்ராஜா(28). மாறாந்தையைச் சேர்ந்த சரவணன் (45). மற்றும் இசக்கிமுத்து(25). ஆகியோர் என தெரிய வந்ததையடுத்து அவர்களை கைது செய்த காவல்துறையினர் அவர்களிடமிருந்து 8 மோட்டார் சைக்கிள்களையும் பறிமுதல் செய்தனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்