திருநெல்வேலி: திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் முனைவர். பா.மூர்த்தி, இ.கா.ப., மேற்பார்வையில், திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N.சிலம்பரசன்.இ.கா.ப., கண்காணிப்பில், மாவட்டத்தில் உள்ள கல்லூரிகளில் பயிலும் மாணவிகள் பாதுகாப்பிற்காக போலீஸ் அக்கா என்ற திட்டம் ஆரம்பிக்கப்பட்டு ஒவ்வொரு கல்லூரிக்கும் ஒரு பெண் காவலர் என்று நியமனம் செய்யப்பட்டுள்ளது. நியமிக்கப்பட்ட பெண் காவலர்களை மாவட்ட காவல் அலுவலகத்திற்கு நேரில் அழைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கீழ்கண்டவாறு அறிவுரை வழங்கினார்.
கல்லூரிகளுக்கு வாரம் ஒரு முறை சென்று மாணவிகளுடன் கலந்துரையாடல் நடத்த வேண்டும், கலந்துரையாடலின் போது மாணவிகளுக்கு ஏற்படும் பிரச்சனைகள் குறித்து உடனுக்குடன் தெரியப்படுத்தும் விதமாக போலீஸ் அக்காவின் தொலைபேசி எண் மாணவிகளுக்கு கொடுக்கப்பட வேண்டும், மாணவிகளிடம் இருந்து பெறப்படும் தகவல்கள் அனைத்தும் ரகசியம் காக்கவும், புகார் பெற்றால் துரித விசாரணை மேற்கொண்டு சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ளவும், காவல் துறைக்கும் மாணவிகளுக்கும் போலீஸ் அக்கா ஒரு பாலமாக இருந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்