இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகேயுள்ள K.சத்திரம் பகுதியில் மாரியம்மாள் என்ற பெண்ணை தாக்கி காயப்படுத்தியதாக, அதே பகுதியைச் சேர்ந்த முத்துமணி என்பவர் மீது சாயல்குடி காவல் நிலையத்தில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கை விசாரணை செய்த இராமநாதபுரம் மாவட்ட வன்கொடுமை தடுப்பு நீதிமன்ற நீதிபதி குற்றவாளி முத்துமணிக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்கள். மேலும் திறம்பட செயல்பட்டு குற்றவாளிக்கு தண்டனை பெற்று தந்த காவல்துறையினரை காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்.IPS, அவர்கள் பாராட்டினார்கள்.
















