மயிலாடுதுறை: இந்திய தண்டனைச் சட்டம், குற்ற விசாரணைமுறைச் சட்டம், இந்திய சாட்சிய சட்டங்களுக்கு மாறாக பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா, மற்றும் பாரதிய சாக்ஷிய அதிநியம் ஆகிய மூன்று சட்ட திருத்தங்களை மத்திய அரசால் கொண்டுவரப்பட்டுள்ளதை பற்றிய பயிற்சி வகுப்பு அனைத்து அதிகாரிகளுக்கும் காவல் ஆளிநர்களுக்கும் அளிக்கப்பட்டு வருகிறது. (05.06.2024)ம் தேதி மயிலாடுதுறை உட்கோட்டத்தில் திரு. P. ஜெயக்குமார், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (தலைமையிடம்) அவர்கள் மேற்பார்வையில் காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்களுக்கு சட்ட திருத்தம் பற்றிய பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதே போல் சீர்காழி உட்கோட்டத்தில் முனைவர் K.சிவசங்கரன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (இணையவழி குற்றம்) அவர்கள் மேற்பார்வையில் காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.