தூத்துக்குடி: தூத்துக்குடி ஆயுதப்படை காவலர் குடியிருப்பு வளாகத்தில் காவல் அதிகாரிகள் உட்பட சுமார் 500க்கும் மேற்பட்ட காவல்துறையினர் மற்றும் அவர்களது குடும்பத்தார்கள் வசித்து வருகின்றனர். மேற்படி அவர்களுக்கு பயன்படும் வகையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவின் படி புதிதாக உடற்பயிற்சி கூடம் நிறுவப்பட்டது. மேற்படி நிறுவப்பட்ட புதிய உடற்பயிற்சி கூடத்தை (31.12.2025) தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான் இ.கா.ப அவர்கள் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார். இந்நிகழ்வின் போது தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் டாக்டர் C. மதன் இ.கா.ப அவர்கள் மற்றும் ஆயுதப்படை காவல் ஆய்வாளர் திரு. சுனைமுருகன் உட்பட காவல்துறையினர் உடனிருந்தனர்.
















