திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் பழவூர் சங்கனாபுரம், கீழத் தெருவை சேர்ந்த தமிழ்செல்வன் (42). அதே பகுதியில் கடை வைத்து நடத்தி வருகிறார். மேற்படி கடையை உணவு பாதுகாப்பு துறையினர் சோதனை செய்தபோது, அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்ய வைத்திருந்ததால் ரூ. 25 ஆயிரம் அபராதம் விதித்தும், உணவு பாதுகாப்பு துறையால் வழங்கப்பட்ட உணவு உரிமம் மற்றும் பதிவு சான்றிதழ்களை தற்காலிகமாக இடைக்கால ரத்து செய்து கடையை 14 நாட்களுக்கு சீல் வைத்து அடைத்து
வள்ளியூர் உணவு பாதுகாப்பு துறை அலுவலர், ராமகிருஷ்ணன் மற்றும் பழவூர் காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்