திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே உள்ள வேம்பார்பட்டி பகுதியை சேர்ந்த பிரபாகரன் என்பவர் கோபால்பட்டியில் டீ கடை நடத்தி வருகிறார். இவர் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்வதாக தகவலின் அடிப்படையில், இதனை உறுதி படுத்திய சாணார்பட்டி காவல் நிலைய சார்பு ஆய்வாளர். வேலுமணி தலைமையிலான காவல்துறையினர் கைது செய்து, புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் கலைவாணி தலைமையில், உணவு பாதுகாப்பு அலுவலர் வசந்தன், சுகாதார ஆய்வாளர்கள் முனியப்பன், நல்லேந்திரன், குணசீலன் மற்றும் அலுவலர்கள் அந்த கடைக்கு சீல் வைத்து ரூ25,000 அபராதம் விதித்தனர். மேலும் சாணார்பட்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவது தெரிந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர்.
![](https://policenewsplus.in/wp-content/uploads/2021/06/dindigul-alagu-raja-233x300.jpg)