கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் சிப்காட் காவல் நிலைய பகுதியில் ஜூஜூவாடி சோதனை சாவடி அருகே போலீசார் வாகன சோதனை செய்த போது அவ்வழியாக வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட ₹25,920/- ரூபாய் மதிப்பிலான புகையிலை பொருட்கள் மற்றும் ₹3,640/- ரூபாய் மதிப்பிலான மதுபானம் இருந்தது. வெளி மாநிலத்திலிருந்து புகையிலை பொருட்கள், மதுபானம் கடத்தி வந்த நபரை கைது செய்து நிலையம் கொண்டு வந்து வழக்கு பதிந்து குற்றவாளியை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.
















