கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் சிப்காட் காவல் நிலைய பகுதியில் ஜூஜூவாடி காவல் சோதனைச் சாவடி அருகே போலீசார் வாகன சோதனையில் இருந்தபோது அவ்வழியாக பையுடன் வந்த நபரை நிறுத்தி சோதனை செய்ததில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட ₹ 33,336 /- ரூபாய் மதிப்பிலான புகையிலை பொருட்கள் இருந்தது, வெளி மாநிலத்திலிருந்து புகையிலை பொருட்கள் கடத்தி வந்த நபரை கைது செய்து அவரிடமிருந்து புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்து நிலையம் கொண்டு வந்து வழக்கு பதிந்து குற்றவாளியை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.
















