திருநெல்வேலி : திருநெல்வேலி மானூர் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் காவல் உதவி ஆய்வாளர் சஜீவ் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியின் போது அழகிய பாண்டியபுரம், சுப்பையாபுரம் அருகே சந்தேகத்தின் அடிப்படையில் நின்று கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த கண்ணன் மனைவி ராசாத்தி (35). என்பவரை சோதனை செய்து பார்த்தபோது, அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்வதற்காக வைத்திருந்தது தெரிய வந்ததால் காவல்துறையினர் ராசாத்தியை கைது செய்து அவரிடம் இருந்து 23 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்