இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்,IPS., அவர்களின் உத்தரவின் பேரில் புகையிலைப் பொருட்களுக்கு எதிரான தீவிர சோதனையில் பெருநாழி காவல் நிலையப் பகுதியில் காவல்துறையினர் மேற்கொண்ட சோதனையில், சட்டவிரோத விற்பனைக்காக வாகனத்தில் புகையிலைப் பொருட்களை கொண்டு சென்ற சுப்புராஜ் மற்றும் சங்கர் ஆகியோரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்கள். மேலும் அவர்களிடமிருந்து புகையிலைப் பொருட்கள் 30 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது.