விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் கடந்த (31.03.2025) ஆம் தேதி (25). வயது மதிக்கத்தக்க இளம்பெண் விருதுநகர் கணிணிவழி குற்றப்பிரிவு காவல் நிலையத்தை அணுகி யாரோ ஒரு அடையாளம் தெரியாத நபர் இணையத்தில் தன்னை பின் தொடர்ந்து தான் post செய்த புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து பதிவிட்டுள்ளதாக முறையிட்டதின் பேரில், CSR No.401/2025 Dt: (31.03.2025) பதிவிட்டுள்ளதாக , CSR No.401/2025 Dt: 31.03.2025 , விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.D.கண்ணன் அவர்கள் உடனடியாக சம்மந்தப்பட்ட அந்த நபரை கண்டுபிடிக்க உத்தரவிட்டு தக்க வழிகாட்டுதல்கள், அறிவுரைகள் வழங்கியதன் பேரில், விருதுநகர் மாவட்ட கணிணிவழி குற்றப்பிரிவின் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.K.அசோகன் அவர்களின் மேற்பார்வையில், கடந்த (13.05.2025)ஆம் தேதி விருதுநகர் கணினி வழி குற்றப்பிரிவு காவல் நிலைய எண் .06/2025 u/s 78(1)(II) ofof BNS r/w 66(E) of IT Amendment Act வழக்கு பதிவு செய்து, காவல் ஆய்வாளர் திருமதி.பொன்மீனா, சார்பு ஆய்வாளர் திரு.கோபு, சார்பு ஆய்வாளர் திரு.ஜெயபிரகாஷ் மற்றும் காவல் ஆளிநர்கள் இணையவழி (Cyberspace) உதவியுடன் அந்த நபரை தேடியதில் அவர் சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த சிவசுப்பிரமணியன் என்பவர் என்றும் சமூக ஊடகத்தில் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து பதிவிட்டவர்.
என தெரியவந்ததால், அவர் தற்போது சாத்தூரில் இருப்பதை கண்டறிந்து காவல் ஆய்வாளர் திருமதி.பொன்மீனா தனிப்படையினருடன் சாத்தூருக்கு விரைந்து சென்று வழக்கின் குற்றவாளி திரு.சிவசுப்பிரமணியன் (27/2025), த/பெ.மாரியப்பன், வடமலாபுரம், சாத்தூர் என்பவரை (13.05.2025)ஆம் தேதி கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டு, விருதுநகர் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார். இவ்வழக்கில் துரிதமாக செயல்பட்ட விருதுநகர் மாவட்ட கணிணிவழி குற்றப்பிரிவு காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. கண்ணன் அவர்கள் வெகுவாக பாராட்டினார்கள்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமைநிருபர்

திரு.விஜயராஜ்