திருவள்ளூர்: மீஞ்சூர் வெளிவட்ட சாலை சந்திப்பில் ஆந்திராவில் இருந்து வந்த லாரி பிரேக் பழுதான நிலையில் மணலியில் இருந்து மீஞ்சூருக்கு ஊழியர்களை விடுவதற்காக வந்த வேன் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. வாகனத்தில் ஓட்டுநரும் ஒரே ஒரே ஊழியரும் இருந்ததால் நல்வாய்ப்பாக பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. வேன் ஓட்டுநரும் பின் இருக்கையில் இருந்த ஊழியரும் சிறு காயங்களோடு உயிர் தப்பினர். இப்பகுதியில் மூன்று தனியார் பள்ளிகள் இயங்கி வருகிறது. பள்ளி விடும் நேரத்திற்கு சற்று முன்பாக நடந்த இந்த விபத்து பெற்றோர்களிடேயே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு