திருநெல்வேலி: திருநெல்வேலி கங்கைகொண்டான் பருத்திகுளம், காலணி தெருவை சேர்ந்த குருசாமி என்பவரின் மகன் ராஜ்குமார் (30). சமூக வலைதளமான “Instagram” ல் இருதரப்பினருக்கிடையே பிரச்சனையை தூண்டும் வகையில் வீடியோவை பதிவு செய்து சமூக வலைதளத்தில் பரப்பியுள்ளார். இது குறித்து காவல்துறையினருக்கு தெரியவந்ததையடுத்து
கங்கைகொண்டான் வட்ட காவல் ஆய்வாளர், வேல்கனி வழக்கு பதிவு செய்து வீடியோவை வெளியிட்ட ராஜ்குமாரை 13.04.2025) அன்று கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றார். இது போன்று பொது அமைதியை சீர்குலைக்கும் வகையில் சமூக வலைதளங்களில் பதிவு செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N.சிலம்பரசன், இ.கா.ப., எச்சரித்துள்ளார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்