திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் பாப்பாக்குடி புதுகிராமத்தை சேர்ந்த பால சுப்பிரமணியன் மகன் அஜித் சூர்யா (19). சமூக வலைதளமான “Instagram” ல் இருதரப்பினருக்கிடையே பிரச்சனையை தூண்டும் வகையில் சர்ச்சைக்குரிய வசனங்கள் வைத்து கையில் அரிவாளுடன் வீடியோவை பதிவு செய்து சமூக வலைதளத்தில் பரப்பியுள்ளார். இது குறித்து பாப்பாக்குடி காவல்துறையினருக்கு தகவல் தெரியவந்ததையடுத்து காவல் உதவி ஆய்வாளர், ஆழ்வார் வழக்கு பதிவு செய்து வீடியோவை வெளியிட்ட அஜித் சூரியாவை (01.05.2025) அன்று கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றார்.
திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினர் சமூக வலைதளங்களை உன்னிப்பாக கண்காணித்து வருகின்றனர். இது போன்று பொது அமைதியை சீர்குலைக்கும் வகையில் சமூக வலைதளங்களில் பதிவு செய்து பரப்புபவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், N.சிலம்பரசன். இ.கா.ப, எச்சரித்துள்ளார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்