திண்டுக்கல்: திண்டுக்கல், எரியோடு பகுதியை சேர்ந்த சண்முகராஜ்(55). இவர் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பணியாளராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு முதல் மனைவி இல்லாத நிலையில் 2-வது திருமணம் செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கொடைக்கானலுக்கு சுற்றுலாவிற்கு சண்முகராஜ் மற்றும் 2-வது மனைவி, 2-வது மனைவியின் மகளான (17). வயது சிறுமி சென்று தனியார் தங்கும் விடுதியில் தங்கி உள்ளனர். அப்போது சண்முகராஜ் மது போதையில் (17). வயது சிறுமியை பாலியல் தொல்லை செய்ததாக காவல் உதவி எண் 1098-க்கு சமூக ஆர்வலர் தெரிவித்ததை தொடர்ந்து.
விரைந்து வந்த கொடைக்கானல் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு மகள் ஸ்தானத்தில் உள்ள (17). வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த சண்முகராஜ் மற்றும் அதற்கு உடந்தையாக இருந்த 2-வது மனைவி ஆகிய 2 பேரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா















