திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், நகர் வடக்கு காவல் நிலையத்தில் 2019 ஆம் ஆண்டு பதிவான வழக்கில் 17 வயது சிறுமியை திருமண ஆசை காட்டி கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த அனுமந்தராயன் கோட்டை பகுதியைச் சேர்ந்த சகாய பெஞ்சமின் (30) என்பவரை போக்சோ வழக்கில் நகர் வடக்கு காவல் நிலைய போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இவ்வழக்கு திண்டுக்கல் விரைவு மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.பாஸ்கரன் அவர்களின் அறிவுறுத்தலின்படி நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் திரு.உலகநாதன் அவர்கள் நீதிமன்ற சிறப்பு சார்பு ஆய்வாளர் திரு.பாக்கியம் அவர்கள் மற்றும் அரசு வழக்கறிஞர் திருமதி.ஜோதி அவர்களின் சீரிய முயற்சியால் (11.04.2023), ம்தேதி திண்டுக்கல் விரைவு மகிளா நீதிமன்ற நீதிபதி அவர்கள் குற்றவாளி சகாய பெஞ்சமின் என்பவருக்கு 25 வருடங்கள் சிறை தண்டனை மற்றும் ரூ.5,000/- அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்கள்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.