திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பழனி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2021-ஆம் ஆண்டு 16 வயது சிறுமியை காதலித்து ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த பழனியைச் சேர்ந்த சஞ்சய்(21). என்பவரை போக்சோ வழக்கில் காவல் நிலைய போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். இந்நிலையில் இவ்வழக்கு திண்டுக்கல் சிறப்பு போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர்.அ.பிரதீப்., இ.கா.ப., அவர்களின் அறிவுறுத்தலின் படி, பழனி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.செல்வி அவர்கள் நீதிமன்ற தலைமை காவலர் திருமதி. பாக்கியலட்சுமி அவர்கள் மற்றும் அரசு வழக்கறிஞர் திருமதி. மைதிலி அவர்களின் சீரிய முயற்சியால் (29.05.2024)-ம் தேதி திண்டுக்கல் சிறப்பு போக்சோ நீதிமன்ற நீதிபதி அவர்கள் குற்றவாளி சஞ்சய் என்பவருக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.2000/- அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்கள். மேலும் இந்த ஆண்டு இதுவரை 24 போக்சோ வழக்குகளுக்கு தண்டனை பெறப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா
















