திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த (23.10.2022), ம் தேதி (11), வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூக்கால் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன் (51), என்பவரை கொடைக்கானல் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்கள்.
இந்நிலையில் கிருஷ்ணன் என்பவரின் குற்ற நடவடிக்கைகளை ஒடுக்கும் பொருட்டு திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.பாஸ்கரன், அவர்களின் பரிந்துரையின் பேரில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் திரு.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் கிருஷ்ணனை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
உத்தரவை தொடர்ந்து கொடைக்கானல் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கிருஷ்ணனை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா