திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், பழனி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2020-ஆம் ஆண்டு இரண்டு சிறுமிகளை பாலியல் துன்புறுத்தல் செய்த வழக்கில் தாளையம், சப்பலநாயக்கன்பட்டியைச் சேர்ந்த வேலுச்சாமி (42), என்பவரை பழனி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் இவ்வழக்கு திண்டுக்கல் விரைவு மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.பாஸ்கரன், அவர்களின் அறிவுறுத்தலின்படி பழனி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.கவிதா அவர்கள் நீதிமன்ற சிறப்பு சார்பு ஆய்வாளர் திருமதி.கற்பகவள்ளி அவர்கள் மற்றும் அரசு வழக்கறிஞர் திருமதி.ஜோதி அவர்களின் சீரிய முயற்சியால் (25.11.2022)-ம் தேதி திண்டுக்கல் விரைவு மகளிர் நீதிமன்ற நீதிபதி அவர்கள் குற்றவாளி வேலுச்சாமி (42) என்பவருக்கு 3 வருடங்கள் சிறை தண்டனையும் மற்றும் ரூ.5,000/- அபராதமும் அளித்து தீர்ப்பு வழங்கினார்கள்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா