திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம்,பழனி வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் நடைபெற்ற சாலை பாதுகாப்பு வார விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பழனி பாதயாத்திரை பக்தர்களுக்கு ஒளிரும் மேல் சட்டை ஒளிரும் குச்சி மற்றும் விழிப்புணர்வு நோட்டீஸ் ஆகியவைகளை மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு. அர.சக்கரபாணி அவர்கள் வழங்கினார். அருகில் மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் ச. விசாகன், இ. ஆ. ப., அவர்கள், திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. வேலுச்சாமி அவர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. வீ. பாஸ்கரன் அவர்கள், வட்டார போக்குவரத்து அலுவலர்கள் திரு.சுரேஷ் ( திண்டுக்கல் ), திருமதி.ஜெயகௌரி (பழனி), ஒட்டன்சத்திரம் நகர் மன்ற தலைவர் திரு. திருமலைச்சாமி, துணை தலைவர் திரு.வெள்ளச்சாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.