திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காட்டில் இளம் தலைவர் ராகுல்காந்தி பிறந்த தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் திருவள்ளூர் வடக்கு மாவட்டம் சார்பில் இந்திய ஒற்றுமை படகு போட்டியில் பழவேற்காடு கடலில் நடைபெற்ற படகு போட்டியில் பழவேற்காடு பகுதியைச் சேர்ந்த 13 மீனவ கிராமங்களைச் சேர்ந்த 18 படகுகள் இப்போட்டியில் கலந்து கொண்டன. பொன்னேரி சட்டமன்ற உறுப்பினரும் திருவள்ளூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவருமான துரை.சந்திரசேகர் ஏற்பாட்டில் நடைபெற்ற
போட்டியினை திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்தில் துவக்கி வைத்தார். போட்டியில் காட்டுப்பள்ளி குப்பம்,செம்பாசிப்பள்ளி குப்பம்,வைரவன் குப்பம் போட்டியாளர்கள் முறையே முதல் மூன்று இடங்களை பிடித்தனர். ஆனால் விதிமுறையை சரியாக பின்பற்றாமல் வெற்றி பெற்றதாக கூறி படகு போட்டியில் கலந்து கொண்ட ஒருசில கிராம போட்டியாளர்கள் ஆட்சேபனை செய்து மீண்டும் போட்டியினை நடத்த கோரிக்கை வைத்தனர். ஆனாலும் முறையாக நடைபெற்ற படகு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும் என அனைத்து கிராம நிர்வாகிகளுடன் கலந்து பேசி பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வந்தனர்.
பின்னர் வெற்றி கோப்பையிணையும் முதல் பரிசு தொகையான ஒரு லட்ச ரூபாயும் காட்டுப்பள்ளி குப்பம் மீனவர்களுக்கு வழங்கப்பட்டது. இரண்டாவது பரிசான 75 ஆயிரம் ரூபாயும் வெற்றிக் கோப்பையும் செம்பாசி பள்ளி குப்பம் கிராமர்களுக்கு வழங்கப்பட்டது. மூன்றாவது பரிசாகிய 50 ஆயிரம் ரூபாயும் வெற்றி கொப்பையும் வைரவன் குப்பம் கிராம மீனவர்களுக்கு வழங்கப்பட்டது. இந்த போட்டியில் பொன்னேரி காவல் உதவி ஆணையர் சங்கர், திருப்பாலைவனம் காவல் ஆய்வாளர் காளிராஜ் மற்றும் காங்கிரஸ் கட்சி முக்கிய நிர்வாகிகள் டி.எல்.சதாசிவ லிங்கம்,ஏ.ஜி சிதம்பரம்,காட்டுப்பள்ளி முனுசாமி, பழவை ஜெயசீலன், சாய் சரவணன், அத்திப்பட்டு புருஷோத்தமன், மீஞ்சூர் அன்பரசு, ஏலியம்பேடு மதன், கோட்டைக் குப்பம் ஜெயராமன், பசியாவரம் சேகர், பழவை பழனி, அரங்கம் ராஜீவ் காந்தி, ஆண்ட்டிக்குப்பம் சஞ்சய் காந்தி, எஸ்.பி.குப்பம் சுதாகர், ஜானகிராமன்,எஸ் தாக்கி,மணி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். பார்வையாளர்களாக சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பழவேற்காடு பகுதி மக்கள் கலந்து கொண்டு போட்டியாளர்களை உற்சாகப்படுத்தினர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு