திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பழனியில் கடந்த சில நாட்களாக மாலை நேரங்களில் இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் மூன்று பேருடன் அதிவேகமாக செல்வதாக பழனி டிஎஸ்பி. தனஞ்ஜெயன் அவர்களுக்கு வந்த புகாரை தொடர்ந்து பழனி நகர் காவல் நிலைய ஆய்வாளர் மணிமாறன் தலைமையில் சார்பு ஆய்வாளர் விஜய் மற்றும் காவலர்கள் பழைய தாராபுரம் ரோடு, பாலாஜி மில் ரவுண்டானா அருகே தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
வாகன சோதனையின் போது தலைக்கவசம் அணியாமல் இரு சக்கர வாகனத்தில் வந்த நபர்களுக்கு அபராதம் விதித்து தலைக்கவசம் அணிவதன் அவசியம் இரண்டு சக்கர வாகனத்தில் மூன்று பேர் நான்கு பேர் பயணம் செய்தவர்கள் போன்றவர்களை நிறுத்தி அறிவுரை வழங்கினார்கள்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா