திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் வி.கே.புரம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியின் விடுதியில் இருந்து, தகவல் எதுவும் தெரிவிக்காமல் கேரளாவிற்கு செல்ல (12) வயதுடைய மாணவி முயற்சி செய்துள்ளார். பேருந்து நிலையத்தில் இதனை அறிந்த வி.கே.புரம், பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த (ஆட்டோ டிரைவர்) அன்னராஜ் (49) சிறுமியை வி.கே.புரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். இது குறித்து தகவல் அறிந்த திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N.சிலம்பரசன். இ.கா.ப., அன்னராஜை நேரில் அழைத்து அவருடைய பொறுப்புணர்வை பாராட்டும் வகையில் பொன்னாடை அணிவித்து பாராட்டு சான்றிதழ், வெகுமதி வழங்கி கௌரவித்தார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்