தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான் இ.கா.ப அவர்களின் உத்தரவின்படி விளாத்திகுளம் காவல் நிலைய போலீசார் (21.07.2025) விளாத்திகுளம் அரசு மேல்நிலைப் பள்ளியிலும், புதூர் காவல் நிலைய போலீசார் புதூர் நாடார் மேல்நிலைப் பள்ளியிலும் மாணவ மாணவிகளிடம் போக்சோ சட்டம், குழந்தை திருமண தடைச் சட்டம், பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு, காவல் உதவி செயலி, குழந்தைகள் உதவி எண் 1098, பெண்கள் உதவி எண் 1091, போதைப் பொருள் தடுப்பு, ஆன்லைன் விளையாட்டால் ஏற்படும் ஆபத்து போன்றவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.