திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடியைச் சேர்ந்த பிளஸ் 1 மாணவன், பணகுடி தனியார் பள்ளியில் படித்து வருகிறான். இவன் தன்னுடன் படிக்கும் சக மாணவர்கள் இருவருடன்
சேர்ந்து, சிகரெட் புகைத்தபோது அவர்கள் கைப்பேசியில் வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு வீட்டில் இருந்து நகை, பணம் எடுத்து வரும்படி மிரட்டி உள்ளனர். மாணவனும் பயந்து நகை, பணத்தை எடுத்துக் கொடுத்துள்ளான். இந்நிலையில் வீட்டில் நகை காணாமல் போனது பெற்றோருக்கு தெரியவந்ததால் மாணவன் நடந்த சம்பவத்தை வீட்டில் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவரது தந்தை அளித்த புகாரின் பேரில், பணகுடி காவல்துறையினர் வழக்குப்பதிந்து, 2 மாணவர்களையும், உடந்தையாக இருந்த ஒருவரையும் கைது செய்தனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாத