கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.R. ஸ்டாலின் IPS அவர்கள் “ZERO ACCIDENT KUMARI” என்ற குறிக்கோளுடன் பல்வேறு விபத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். அதன்படி காவல் கண்காணிப்பாளர் திரு. ஸ்டாலின் I.P.S., அவர்களின் உத்தரவின் பேரில் நாகர்கோவில் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் திரு. சிவசங்கரன் T.P.S., அவர்களின் மேற்பார்வையில், போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு.பேச்சி முத்து அவர்களின் தலைமையில் நாகர்கோவில் போக்குவரத்து சார்பு ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் மாநகர் பகுதியில் புத்தாண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வாகன சோதனை நடத்தினர்.
அப்போது, பதிவு எண் இல்லாதது, ஓட்டுநர் உரிமம் இல்லாதது, சைலன்சர் மாற்றம் செய்யப்பட்டது, ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டியது, குடி போதையில் வாகனம் ஓட்டியது ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அபராதம் விதித்து வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் (31.12.2025) அன்று 145000/– ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
















