திண்டுக்கல் : திண்டுக்கல் தாடிக்கொம்பு காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் சார்பு ஆய்வாளர் பிரபாகரன் மற்றும் காவலர்கள் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது உலகம்பட்டி, வடக்கியூர் பகுதியில் பணம் வைத்து சூதாடிய சார்லஸ், கோபாலகிருஷ்ணன், வடிவேல், சரவணகுமார், அருண்குமார், முருகேசன் ஆகிய 6 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து பணம் மற்றும் சீட்டுக்கட்டுகள் ஆகியவற்றை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா
















