திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே பொன்னுமாந்துறை புதுப்பட்டி சின்னகுளம் அருகே ராஜகோபால் (எ) சப்பை கோபால் என்பவர் படுகொலை செய்தது. தொடர்பாக தாலுகா காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது குறித்து மாவட்ட எஸ்.பி.பிரதீப் உத்தரவின் பேரில் புறநகர் டிஎஸ்பி உதயகுமார் மேற்பார்வையில் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் சந்திரமோகன் தலைமையில் சார்பு ஆய்வாளர்கள் அருண்நாராயணன், பாலசுப்பிரமணியன் தனிப்பிரிவு காவலர்கள் வினோத், கார்த்திக் மற்றும் காவலர்கள் கொண்ட தனிப்படையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட சரவணகுமார், காடு (எ) அன்பழகன், ஜெயகிருஷ்ணகண்ணன் மற்றும் (16). வயது சிறுவன் ஆகிய 4 பேரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா
















