அரியலூர் : அரியலூர் மாவட்டம் இரும்புலிக்குறிச்சி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட குமிழியம் கிராமத்தில் உள்ள பூமரத்தான் ஏரியை சுற்றி “மரங்களின் நண்பர்கள் குழு” சார்பில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.
அக்குழுவின் வேண்டுகோளினை ஏற்று அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.ஸ்ரீனிவாசன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு , மரக்கன்று நட்டு விழாவை தொடங்கி வைத்தார். பின்னர் மரங்களின் நண்பர்கள் குழுவினர் கிராம மக்கள் அனைவரும் ஆர்வத்துடன் சமூக இடைவெளியை கடைபிடித்து ஏரியைச் சுற்றி மரங்கள் நட்டனர். நிகழ்ச்சியில் சோலைவனம் அமைப்பினர் குழுவும் கலந்து கொண்டனர்.அதனைத்தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.