தூத்துக்குடி: வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான் இ.கா.ப அவர்களின் உத்தரவின்படி திருச்செந்தூர் கோவிலுக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு முத்தையாபுரம், செய்துங்கநல்லூர் சோதனை சாவடி உட்பட மாவட்டத்தின் முக்கிய இடங்களில் காவல்துறையினர் பக்தர்களுக்கு ஒளிரும் ஸ்டிக்கர்கள் ஒட்டியும் பாதுகாப்பாக பாதயாத்திரை செல்லுமாறும் எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.