திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N. சிலம்பரசன், இ.கா.ப., மேட்ரிமோனியல் மூலமாக நடைபெறும் நூதன மோசடி குறித்து பொதுமக்களுக்கு வெளியிட்டுள்ள எச்சரிக்கை குறிப்பு. திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த ஒரு நபர் ஆன்லைன் மேட்ரிமோனியில் மணமகள் தேவை என பதிவு செய்திருந்தார். இதைப் பார்த்து பெண் ஒருவர் வாட்ஸ்ஆப் வாயிலாக அவரை தொடர்பு கொண்டு திருமணம் செய்து கொள்வதாக விருப்பம் தெரிவித்துள்ளார். மேலும் தான் வெளிநாட்டில் வேலை பார்ப்பதாகவும், விரைவில் நேரில் பார்க்க வருவதாகவும் கூறி வெகுநாள்களாக கைப்பேசியில் பேசி பழகி வந்துள்ளார் அப்பெண். பின்னர் டிரேடிங் மூலமாக பணத்தை மூதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் எனவும், எதிர்கால வாழ்க்கைக்கு பயன்படுத்திக்கொள்ளலாம் எனவும் கூறி அதிக அளவில் பணம் பெற்றுக்கொண்டு அந்தப் பெண் மோசடி செய்துள்ளார்.
எனவே பொதுமக்கள் இது போல் ஏமாறாமல் இருக்க ஆன்லைன் மேட்ரிமோனியில் வரன் பார்த்து பேசும் நபர்களை நேரில் பார்த்து உறுதி செய்ய வேண்டும். மேலும், டிரேடிங் என்ற பெயரில் பணத்தை கொடுத்து ஏமாற வேண்டாம். இது போன்ற இணையவழி மோசடிகள் நடைபெற்றால் சைபர் கிரைம் இணையதளத்திலும் மற்றும் 1930 என்ற எண்ணுக்கும் அழைத்து புகார் பதிவு செய்யலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்